Saturday, September 24, 2011

facebook இவ்வாரம் வெளியிட்ட 5 முக்கியமான புதிய மாற்றங்கள்!

Facebook ஸ்தாபகர் Mark Zukerberg கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்த facebook இன் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான புதிய மாற்றங்களை ஒரே பார்வையில் இங்கு தருகிறோம்.

1 – Timeline – இது உங்களைப்பற்றிய ஒரு தகவல் ஓடையாகும். இது புகைப்படங்கள் மற்றும் ஏனைய பதிவுகள் அனைத்தையும் கொண்டிருக்கும். இல் இணைந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமாக உங்களின் வாழ்க்கையை நீங்கள் பார்க்கலாம்.

2 – Facebook Gestures – இது நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களையும் உங்கள் நண்பர்களுக்கு இலகுவாக வெளிப்படுத்தும் வசதியாகும். இதன்மூலம் அதிகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

3 - உங்களைப்பற்றிய தகவல்களை பயன்பாட்டாளர்கள் உங்கள் கணக்கில் பகிர்ந்துகொள்வதற்கு ஒரே தடவையில் அனுமதியைப்பெறும் முறை. இதன்மூலம் ஒவ்வொருமுறையும் அனுமதிபெறத்தேவையில்லை. இதனால் உங்கள் செய்தியோடை நிரம்பிவிடுமென அஞ்சத்தேவையில்லை.

4 – உங்களினதும் உங்களின் நண்பர்களினதும் முக்கியத்துவம் குறைந்த நடவடிக்கைகள் Ticker எனப்படும் பகுதிக்கு தானாகவே மாற்றப்படும்.

5 - facebook இலிருந்தவாறே பாடல்கள் திரைப்படங்கள் மற்றும் செய்திகளை பார்த்தும் கேட்டும் அனுபவிக்க முடியும். உங்கள் நண்பர்கள் பார்வையிடும் திரைப்படங்கள் முதலானவற்றை facebook இன் Ticker உங்களுக்கு அறிவிக்கும். நண்பர்களுடன் இணைந்து பாடல் கேட்கலாம். facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு 800 மில்லியனை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 500 மில்லியன் பேர் facebook ஐ பார்வையிட்ட சாதனையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

Thursday, September 22, 2011

கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த..

"இன்ஸ்டால் செய்து, சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும், கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே, வேலையைத் தொடங்குகிறது'' என்ற குற்றச் சாட்டினைக் கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவர்களிடம் கேட்கலாம். இங்கு எது சரி அல்லது எது உதவியாய் இல்லை என்று பகுத்தறிவது எளிதல்ல. இருப்பினும், உங்கள் கம்ப்யூட்டருக்கு உரமூட்ட, அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.

1. கெடுதல் புரோகிராம்களை நீக்குக: புதிய கம்ப்யூட்டர்களில், மால்வேர் (Malware) எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருப்பதில்லை. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களில், இவை உங்கள் கம்ப்யூட்டரை அடைந் திருக்கும். சில நாட்களாக, கம்ப்யூட்டர் இயங்குவது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தால், அதில் மால்வேர் இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம். ஒரு மால்வேர் கம்ப்யூட்டர் ஒன்றில் திருட்டுத் தனமாக நுழைந்திட பல்லாயிரம் வழிகள் உள்ளன. அனைத்தையும் அடைத்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் அமர்ந்து இயங்கிக் கொண்டு, ஸ்பேம் எனப்படும் இமெயில்களை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பலாம்; உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தவாறே, தொடர்ந்து பரவ அடுத்த கம்ப்யூட்டர்களைத் தேடலாம்; நாம் அமைத்துள்ள தந்திர சுருக்கு வழிகளைக் கண்டறியலாம் மற்றும் ஹேக்கர்கள் விரும்பும் பல கெடுக்கும் செயல்களில் ஈடுபடலாம். தான் மட்டும் தனியாக இடம் பிடிக்காமல், தன்னுடன் சில வைரஸ்களையும் அழைத்து வந்து இடம் பிடிக்கும் மால்வேர் புரோகிராம்களும் உண்டு. இதனைக் கண்டறிய நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த வேண்டியது வைரஸ் ஸ்கேன் புரோகிராம் ஆகும். கண்டறிந்து நீக்கக் கூடிய ஸ்கேனர்களைப் பயன்படுத்தவும்.

2. வீடியோ கார்டை மேம்படுத்துக: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்ட், தன்னிடம் வரும் சுமையை ஏற்றுச் செயல்படும் அளவிற்குத் திறன் குறைந்த தாக இருந்தால், நிச்சயம் கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகம் குறையும். குறிப்பாக, கேம்ஸ் விளையாடுபவர்கள், கிராபிக்ஸ் புரோகிராம் இயக்குபவர்களுக்கு இது நேரலாம். இவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்டினைக் கூடுதல் திறனுக்கு உயர்த்த வேண்டும்; அல்லது இரண்டாவதாக ஒன்றை இணைக்க வேண்டும்.

3. வேகமாக இயங்கும் ட்ரைவ் தேவை: பல வேலைகளில், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்குக் காரணம் அதில் இணைக்கப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே. ஒரு ட்ரைவின் சில அம்சங்கள் – RPMs, cache size, seek speed, and transfer rate– அதன் செயல் வேகத்தைக் காட்டும். இவற்றின் மூலம் வேகமாக இயங்கக் கூடிய ஹார்ட் டிஸ்க் கினை வாங்கி இணைக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கின் செயல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் அவற்றை மாற்றலாம்.

4. பிரச்னைகளுக்குத் தீர்வு காணல்: ஒரு சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்பது அதன் ஹார்ட்வேர் பிரச்னையாகும். எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டரின் சி.பி.யு. விலிருந்து உண்டாகும் வெப்பம் தணிக்கப் பட்டு, குளிர்வாக இல்லை என்றால், சிஸ்டம் செயல்படும் வேகம் குறையலாம். அதே போல, டிஸ்க்குகளில் ஏற்படும் தீர்க்கப்படக் கூடிய பிழைகள் (Recoverable errors) அந்த டிஸ்க் பயனற்றது எனக் காட்டாமல் இருக்கும். அதே போல, ஹார்ட் டிஸ்க்குகளில் பதியப்படும் பல்வேறு ட்ரைவர் புரோகிராம் கள், குறிப்பாக வீடியோ ட்ரைவர் புரோகிராம்கள், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகத்தைக் குறைக்கும். சிபியு வேக சோதனை, பல்வேறு துணை சாதனங்களில் ஏற்படும் வெப்ப சோதனை, ஹார்ட் ட்ரைவர் பிழைகள் சோதனை, ட்ரைவர் புரோகிராம்களை மேம்படுத்துதல் ஆகிய செயல் முறைகள், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும் பிரச்னையைத் தீர்க்கும்.

5. பிரவுசரை மாற்றுக: பிரவுசர் இயக்கத்தில் ஒன்றும் ரகசியம் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலும், வேகத்திலும் இயங்கக் கூடியவையே. பழக்கம் காரணமாக, நீங்கள் ஒரே பிரவுசரை இயக்கிக் கொண்டிருந்தால், இன்னொரு பிரவுசரை இயக்கி, அப்போது கம்ப்யூட்டர் எப்படி இயங்குகிறது என்று கவனிக்கவும். பலரின் கணிப்பில், குரோம் பிரவுசர் வேகமாக இயங்குகிறது. இதனை இதுவரை பயன் படுத்தாதவர்கள், பயன்படுத்திப் பார்க்கலாம்.

6. குப்பையை அகற்றுக: கம்ப்யூட்டரில் குப்பை போல புரோகிராம்களையும் பைல் களையும் குவித்து வைப்பது, கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினைக் குறைக்கும். உதவிடும் புரோகிராம்கள், டூல்பார்கள், ஆட் ஆன் தொகுப்புகள் எனப் பல புரோகிராம்களை நாம் நம் கம்ப்யூட்டரில் தேக்கி வைக்கிறோம். இவற்றில் சில, கம்ப்யூட்டர் இயங்கும்போதே, இயக்கப்பட்டு பின்னணியில் தொடர்ந்து நாம் அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றை நீக்க வேண்டும். விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் தேவைப்படாத பயன்பாட்டு புரோகிராம்கள், கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் வழங்கிய புரோகிராம்கள், பிரவுசர் ப்ளக் இன் புரோகிராம்கள், நீக்கிய புரோகிராம்களின் தொடர்பு பைல்கள் என இவற்றைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

7. டிபிராக் செய்தல்: கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை டிபிராக் (Defrag) செய்தல் (சிதறிய நிலையில் பதியப் பட்டுள்ள பைல்களை, ஓரிடத்திலேயே இணைந்து இருக்கும்படி அமைத்தல்), கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை நிச்சயம் அதிகப்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவிட, விண்டோஸ் சிஸ்டம் தரும் வசதி மட்டுமின்றி, அதிகமான அளவில் தர்ட் பார்ட்டி புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன.மேலே தரப்பட்டுள்ள காரணங்களுடன் இன்னும் பல காரணங்களினால், கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையலாம். இருப்பினும், மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிச்சயம் கம்ப்யூட்டரின் வேகம் அதிகமாகும்.

Monday, September 12, 2011

வளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம் !!

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், லினஸ் டோர்வால்ட்ஸ் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் திட்டம் குறித்து, யூசர்நெட் என்ற அஞ்சல் குழுவில் அறிவித்த போது, அது உலகை வென்று வாகை சூடும் என எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் இது பற்றி எழுதுகையில், சும்மா பொழுது போக்காகத்தான் இதனை உருவாக்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 80386 ப்ராசசர் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத்தான், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வடிவமைத் ததாகவும் பின் நாளில் எழுதினார். ஆனால் நடந்தது வேறு. இன்று புதியதாக உருவாகும் அனைத்து ப்ராசசர்களும் லினக்ஸ் இயங்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. லினக்ஸ் எந்த வகைக் கம்ப்யூட்டரையும், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட்புக், ஸ்மார்ட்போன் முதல் மெயின்பிரேம் வரை, மற்றும் பிற, என அனைத்து வகை கம்ப்யூட்டிங் பணிகளையும் எளிதாகவும், விரை வாகவும் மேற்கொள்ள உதவிடும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இன்று உருவெடுத்துள்ளது. டெல், எச்.பி. ஆரக்கிள், ஐ.பி.எம். என அனைத்து முன்னணி பெர்சனல் கம்ப்யூட்டர் நிறுவனங்களும் லினக்ஸ் சிஸ்டத்திற்குத் தொடக்கம் முதல் ஆதரவு அளித்தன. வர்த்தக ரீதியாக லினக்ஸ் சிஸ்டத்தினை எடுத்துக் கொண்ட ரெட் ஹேட் (Red Hat) நிறுவனம், இன்று 730 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக இயங்கி வருகிறது.

லினக்ஸ் பெற்றுள்ள இந்த வெற்றி எளிதாக அதற்குக் கிடைக்கவில்லை. அது கடந்து வந்த பாதை முட்களும் தடைகளும் நிறைந்ததாகவே இருந்தது. மைக்ரோசாப்ட் இதற்கு முதல் எதிரியாக இருந்தது. தொழில் நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பல தொல்லைகளை மைக்ரோசாப்ட் தந்தது. அனைத்தையும் லினக்ஸ் சமாளித்து முன்னேறியது.இன்று கம்ப்யூட்டர் உலகில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றத்தில் லினக்ஸ் சிஸ்டம் சில நன்மைகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மாற்றத்திற்கும் உதவி வருகிறது.

1. லினக்ஸ் எளிமை: லினக்ஸ் சிஸ்டம் தந்த இயக்கச் சூழ்நிலை, யூனிக்ஸ் இயக்கத்தினைப் பின்பற்றியே இருப்பதாக முதலில் குற்றம் சாட்டப் பட்டது. ஆனால், லினக்ஸ் அதன் தொடக்கத்தில் இருந்தே, புதிய கண்டுபிடிப்புடன் கூடிய நவீன தொழில் நுட்பம் தருவதாகவே அமைந்தது. வர்த்தக ரீதியாக யூனிக்ஸ் தொழில் நுட்பம், மிகவும் விலை உயர்ந்த ப்ராசசர்களில் மட்டுமே இயங்கியபோது, லினக்ஸ் வடிவமைத்த டோர்வால்ட்ஸ், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மிகவும் விலை மலிவானதாக து86 ப்ராசசர்களில் இயங்க வைத்தார்.

2. அனைவருக்கும் சொந்தம்:லினக்ஸ் தொகுப்பின் இந்த வளர்ச்சி இன்டர்நெட் பயன்பாட்டின் மூலமே ஏற்பட்டது என்றால், அது மிகையாகாது. லினக்ஸ் கட்டமைப்பினை யார் வேண்டு மானாலும் திருத்தி அமைக்கும் வகையில் ஒரு திறந்த ஊற்றாகவே உள்ளது. உலகின் பெரிய வெற்றி பெற்ற ஓப்பன் சோர்ஸ் திட்டம் இதுவாகத்தான் இருக்கும். லினக்ஸ் இந்த உலகின் எண்ணிக்கை யிலடங்காத புரோகிராமர்களின் பங்களிப்பினால் உருவாகியுள்ளது; தொடர்ந்து உருவாகி வருகிறது. யார் வேண்டுமானாலும் இதன் குறியீடுகளைத்தரவிறக்கம் செய்திடலாம்; சோதனை செய்து பார்க்கலாம்; இதிலிருந்து கற்றுக் கொள்ளலாம்; மாற்றி அமைக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை. தனிநபர் புரோகிராமர்கள் மட்டுமின்றி, நிறுவனங்களும் இதன் லினக்ஸ் கட்டமைப்பினை வளர்ப்ப திலும், மாற்றி அமைப்பதிலும் பங்களித்துள்ளன.

3.இன்டர்நெட் இணைந்து வளர்ச்சி: லினக்ஸ் வளர்ச்சி அடைய இன்டர்நெட் ஒரு கருவியாய் இருந்து உதவியதுபோல, இன்டர்நெட் வளர்ச்சி அடையவும் லினக்ஸ் உதவியாய் இருந்து வருகிறது. லினக்ஸில் இயங்கும் வெப் சர்வர்கள், இமெயில் சர்வர்கள், பைல் சர்வர்கள், டேட்டா பேஸ் அமைப்புகள் மற்றும் பல சாதனங்கள் இன்டர்நெட்டினை இயக்க உதவுகின்றன. லினக்ஸ் அமைப்பின் இயக்குநர் கூறியபடி, நீங்கள் எப்போ தெல்லாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகிறீர்களோ, அப்போ தெல்லாம் லினக்ஸ் சிஸ்டத்தையும் பயன் படுத்துகிறீர்கள். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் சாதனங்களைப் பயன் படுத்தாதவர்கள் இருக்க முடியாது. கூகுளின் தேடல் சாதனங்கள் அனைத்தும் லினக்ஸ் சிஸ்டத்தில் தான் இயங்குகின்றன. யாஹூவின் பெரும் பாலான சர்வர்களும் அவ்வாறே இயங்குகின்றன

4. டெஸ்க்டாப் லினக்ஸ்: டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் லினக்ஸ் பயன்பாடு மிக மிகக் குறைவே. டேட்டா மையங்களிலும் இணைய சர்வர்களிலும் லினக்ஸ் அதிகம் பயன்பட்டாலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இதன் பயன்பாடு சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. மொத்தத்தில் 1% கூட இது இல்லை. சில நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர் களில் லினக்ஸ் தொகுப்பைப் பதிந்தே விற்பனை செய்தாலும், அதனைத் தொடர்ந்து பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவே. லினக்ஸ் சிஸ்டத்தினால், விண்டோஸ் சிஸ்டம் பெற்றுள்ள இடத்தினை சிறிது கூட அசைக்க முடியவில்லை. ஆனால் பல நாடுகளில், அரசு அலுவலகங் களில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் லினக்ஸ் பயன்பாட்டினைக் காண முடிகிறது. இதற்குக் காரணம் தங்கள் அலுவலர் களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் கட்டுப்பாட்டில் கொள்ள, நிர்வாகத்திற்கு லினக்ஸ் உதவுகிறது. மேலும் லினக்ஸ் இலவசம் என்பதால், செலவு குறைகிறது. இந்த வகையில் உபுண்டு லினக்ஸ் (Ubuntu Linux) டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பிரபலமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டில், இது 20 கோடி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இடம் பெறும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

5. மாறிவரும் சூழ்நிலைக்கு லினக்ஸ்: கம்ப்யூட்டர் பயன்பாட்டு வகையானது முற்றிலுமாக மாறி வருகிறது. பாரம்பரிய டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன் பாட்டினை விட்டுவிட்டு, புதிய சாதனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜப்பானில் 50% மின்னஞ்சல்கள், மொபைல் போன் மூலமே அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த வழக்கம், ஐரோப்பியா மற்றும் பிற ஆசிய நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலானவற்றில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன் படுத்தப்படுகிறது. ஆண்ட்ராய்ட், லினக்ஸ் கெர்னலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

6. மைக்ரோசாப்ட் எதிரியா? லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் வருமானத்தைக் குறைக்கும் எதிரியாக, மைக்ரோசாப்ட் தொடக்கத்தில் கருதி யதாக நமக்குத் தகவல்கள் கிடைத்தன. ஆனால் பின்னர், மைக்ரோசாப்ட் சுசி லினக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, லினக்ஸ் உரிமங்களை வாங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு மறு விற்பனை செய்தது. தொடர்ந்து இந்த விற்பனை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. லினக்ஸ் தற்போது வெற்றி பெற் றுள்ள, அதிகப் பயனுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் என உறுதியான பெயரைப் பெற்றுவிட்டது. இனி, இந்த நல்ல பெயரினைத் தொடர்ந்து பாதுகாப்பதே, லினக்ஸ் வழங்கும் நிறுவனங்களுக்குள்ள சவாலாகும்.

Thursday, September 8, 2011

ஒரு முன்னால் மாணவனின் கடிதம்!!

இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி விட்டது. பல பொறியியல் பட்டதாரிகள், தம் படிப்புக்குத் தொடர்பில்லாத, "மார்க்கெட்டிங்' பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்; பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதே நிலை, கம்ப்யூட்டர் படிப்பு முடித்தவர்களுக்கும் வந்து விட்டது.மருத்துவப் படிப்போ கேட்கவே வேண்டாம். சாதாரண நிலையில் அதிகம் பெயர் பெறாத மருத்துவக் கல்லுரிகளில், ஒரு சீட்டின் விலை, 20 - 25 லட்ச ரூபாயும், பெயர் பெற்ற கல்லூரிகளில், 60 லட்ச ரூபாயும் போகிறது. இது போக ஐந்து வருட படிப்பிற்கு, வருடம் இரண்டு லட்ச ரூபாய் வீதம், 10 லட்ச ரூபாய் செலவாகும். வெறும் எம்.பி.பி.எஸ்.,க்கு இன்று மதிப்பில்லை; எம்.எஸ்.,ஸோ, எம்.டி.,யோ முடிக்க வேண்டும். அதற்கு, 30 லட்ச ரூபாய் குறைந்தபட்சமாகத் தேவை.ஆக, சாதாரண மருத்துவக் கல்லூரியில், ஏழு வருடங்கள் படித்து, முழுமையான ஒரு டாக்டராக வெளி வர, 70 - 75 லட்சம் ரூபாய் தேவை.சரி... செலவு செய்தாயிற்று... என்ன சம்பளம் கிடைக்கும்? அரசாங்க வேலை வேண்டாம்... புது வரவுகளுக்கு, தனியாரிடம் என்ன சம்பளம் கிடைக்கும்? 5,000 - 6,000 ரூபாய் - சென்னை நிலவரப் படி கிடைக்கிறது! 40 வயது ஆகும் போது தான், ஒரு டாக்டரால் நாலு காசு பார்க்க முடிகிறது!இதுவே, போட்டியில்லாத கிராமப்புறத்தில் ஒரு, "ஷட்டர் கிளினிக்' (10 அடிக்கு, 10 அடி இடம்) போட்டால், 20 - 30 ஆயிரம் ரூபாயை எம்.பி. பி.எஸ்., டாக்டர் கூட சம்பாதிக்க முடியும் - ஆனால், கிராமத்தில் பணியாற்ற, 95 சதவீதத்தினர் விரும்புவதில்லையே! போகட்டும் — கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்புகள் படித்தவர்களுக்கு உடனடி வேலை... உள்நாட்டில் என்றால், 20 - 30 ஆயிரம் ரூபாய் சம்பளம்... வெளிநாடுகளில் வேலை கிடைத்து விட்டாலோ மாதம், இரண்டு லட்சம் ரூபாய் என்ற நிலையும் மாறி விட்டது. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது... அப்படியே கிடைத்தாலும் 3,000 - 3,500 ரூபாய்க்கு, குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வேலை பார்க்கும் நிலை உள்ளது.நிலைமை இப்படி மோசமாக இருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கயவர்கள் கூட்டமும் பெருகி வருகிறது.காசைக் கொட்டி, மூளையைத் தீட்டி, கஷ்டப்பட்டு படித்து, வெற்றி வாகை சூடிய இளைஞர்களை, அதைரியப்படுத்தும் விதமாக இதை எழுதவில்லை... "எப்படியாவது வேலை கிடைத்தால் போதும்...' என்ற எண்ணத்தில் ஏமாறாமல், எச்சரிக்கையாக இருக்கவே எழுதுகிறேன்...சென்னையில் தங்கி வேலை தேடி வரும் கிராமத்து பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் எழுதிய எச்சரிக்கைக் கடிதம் இது... படியுங்கள்...



என் பெயர் ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) நான் கிளின்டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) பொறியியல் கல்லூரியில் பி.இ., முடித்துள்ளேன். என்னைப் போன்ற படித்து முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவர்களை ஏமாற்றும் போலியான, "கன்சல்டன்சி' அமைப்புகளைப் பற்றி தங்கள் மூலம் இளைஞர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். தற்போது சென்னையில் தங்கி, வேலை தேடி வருகிறேன். கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், கோவையில் உள்ள ஒரு கன்சல்டன்சியின் விளம்பரம், நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது; நான் விண்ணப்பித்து இருந்தேன். ஒரு வாரத்தில் அவர்களிடம் இருந்து பதில் வந்தது. அதில், ஐநூறு ரூபாய் மற்றும் சான்றிதழ் நகல்களை நேரிலோ அல்லது மணியார்டர், தபாலிலோ அனுப்பும்படி இருந்தது.ஆனால், என் நண்பர்கள் சிலர், "இது ஏதாவது ஏமாற்று வேலையாக இருக்கும்; பணம் அனுப்ப வேண்டாம்...' என்று கூறினர்; அதனால், நான் பணம் அனுப்பவில்லை.

ஆனால், அடுத்த இரண்டு வாரத்தில் மறுபடியும் ஒரு தபால் வந்தது. அதில், என் தகுதிக்கேற்ற வேலை தயாராக இருப்ப தாகவும், 1,950 ரூபாய் நேரில் கொண்டு வரும்படி கேட்டு இருந்தனர்.நான், தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டேன். கடிதத்தில் உள்ளதையே, தொலைபேசியிலும் கூறினர். பணம் கட்டினால் பெங்களூருவில் ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்து விடலாம் என்று கூறினர். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள இந்த காலத்தில், இவ்வளவு எளிதாக வேலை கிடைக்கிறதே என்ற எண்ணத்தில், கஷ்டப்பட்டு 2,000 ரூபாயை வீட்டில் வாங்கி, என் கூடப் படித்த நண்பனுடன் கோவை சென்றேன்.அங்கு, 1,950 ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு வாரத்தில் பெங்களூரு அழைத்துச் சென்று வேலையில் சேர்த்து விடுவதாகக் கூறினர். மேலும், என் கூட வந்த நண்பனையும் மூளைச்சலவை செய்து, இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். வேலை பற்றிய கனவுடன் ஊர் திரும்பினோம்.என் நண்பன் பணம் கட்டாததால், அவன் கட்டியவுடன் இருவரையும் சேர்த்து பெங்களூரு அனுப்புவதாக கூறினர். இரண்டு வாரத்திற்குப் பின், நானும், நண்பனும் மறுபடியும் கோவை சென்றோம். என் நண்பனும், 1,950 ரூபாய் கட்டினான். ஒரு வாரத்தில் வேலையில் சேர்வதற்காக உத்தரவு வரும் என்று கூறினர்.கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தோம். இரண்டு, மூன்று வாரங்களாகியும் ஒரு பதிலும் இல்லை. அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஒரு வாரம் கழித்து தொடர்பு கொள்ளுமாறு கூறினர். இரண்டு மாதம் சென்றது.


இந்த இரண்டு மாதமும், ஒரு வாரத்திற்கு இரண்டு முறை என் நண்பனும், நானும் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தோம். அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை.நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டதால், அடுத்த மாதம் பெங்களூருவில் உள்ள ஐ.டி.சி.,யில் கால் சென்டருக்கான எழுத்து தேர்வை எழுதுமாறு கூறினர். அதற்கு அவர்களிடம் இருந்து முறையான தகவல் இல்லை. எந்த விதத்தில் அவர்களை நம்பி பெங்களூரு செல்வது என்று தெரியாமல், அவர்களிடம் விசாரித்ததற்கு எரிந்து விழுந்தனர். அந்த தேர்வை எழுதினால் மட்டும் போதும், ஒரு வாரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.மறுபடியும் நாங்கள் நம்பிக்கை கொண்டு பெங்களூரு சென்றோம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, இந்த, "கன்சல்டன்சி'க்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று! அந்த தேர்வை யார் வேண்டுமானாலும் எழுதலாம், தினமும் அந்த தேர்வு நடக்கிறது என்று அங்கு போய் தான் தெரிந்து கொண்டோம்.


பெங்களூருவில் இருந்து கோவையை தொடர்பு கொண்டோம். அதற்கு அவர்கள், எங்களை ஊருக்குப் போக கூறினர். ஒரு வாரத்தில் வேலைக்கான உத்தரவு வரும் என்றனர்; ஆனால், மறுபடியும் நாங்கள் ஏமாந்தோம். மறுபடி, மறுபடி தொடர்பு கொண்டாலும், "ஒரு வாரத்தில் வேலை கிடைத்து விடும்...' என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டனர்.விரக்தியின் உச்சத்தில், நானும், என் நண்பனும் தற்போது சென்னையில் தங்கி வேலை தேடி வருகிறோம். இப்போது தான் இந்த போலியான, "கன்சல்டன்சி' பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நான், என் நண்பன் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ இளைஞர்கள் எங்களைப் போல போலியான விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, பணத்தைத் தொலைத்து விட்டு நிற்கின்றனர். தமிழக அரசு ஏதாவது செய்து, போலி, "கன்சல்டன்சி'க்களுக்கு தடை விதித்தும், "கன்சல்டன்சி'க்களை முறைப்படுத்தியும் இளைஞர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்.படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு, இந்த மாதிரி போலியான அமைப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். இதையும் தங்களின் சேவைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.— "புரொபஷனல் கோர்ஸ்' முடித்த பட்டதாரி இளைஞர்களே... இதைப் படித்த பின்னும் கவனமின்றி செயல்பட்டு, நொந்து போகாதீர்கள்!


- தினமலர்.

Sunday, September 4, 2011

Win மொழி!!

"குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன'' என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?''ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது'' என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு கதையைச் சொல்ல ஆரம்பிஞூததார்.""இது புத்தர் வாழ்க்கையியில் நடந்தது. ஒரு முறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு கிராமத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள். அப்போது புத்தருக்கு தண்ணீர் தாகம். ஒரு சீடனிடம் தண்ணீர் கேட்டார். அவன் தண்ணீர் எடுத்து வர அருகிலுள்ள குளத்துக்கு ஓடினான். அங்கே குளக்கரையில் கிரமாத்துவாசிகள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் குளம் கலங்கித இருந்தது. அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் போய் கொடுக்க சீடனுக்கு மனமில்லை. ஓடி வந்து புத்தரிடம் பார்த்ததைச் சொன்னான். உடனே புத்தர், பராவயில்லை சிறிது நேரம் கழித்துப்போய் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து கொண்டார்.
ஒரு மணி நேரம் கடந்திருக்கும். புத்தர் சீடனை அழைத்து மீண்டும் குளத்துச் சென்று தண்ணீர் எடுத்துவரச் சொன்னார். சீடனும் குளத்துக்குச் சென்றான். குளக்கரை காலியாக இருந்தது. கிரமாத்துவாசிகள் துவைத்து முடித்து சென்றியிருந்தார்கள். குளத்தின் காலங்கலும் அடங்கி தண்ணீர் தெளிந்து இருந்தது. சீடன் தெளிந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு புத்தரிடம் சென்றான்.ஒரு மணிநேரம் முன்பு பார்த்த குளம் போலவே இல்லை, மிகவும் தெளிந்து இருந்தது என்றான் குருவிடம். அதற்கு புத்தர் அவனிடம் மனித மனமும் இப்படித்தான். பதட்டத்தில் இருக்கும்போது கலங்கியிருக்கும். அந்த நேரம் நாம் எந்தக் காரியும் செய்யக் கூடாது. சிறிது நேரம் அமைதியாக இருந்தால் மனம் தெளிவடையும். அப்போதுதான் நம் பணிகளைச் செய்ய வேண்டும்' என்றார்.

இந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய பிரச்னை என்னவென்று புரிந்து. அப்போது குரு அவனுக்கு சொன்ன WIN மொழி

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!


- kumutham....