Sunday, October 23, 2011

மனிதனை சாய்க்கும் மனவியல்பு சிக்கல்கள்!!

மனவியல்வு சிக்கல்(காம்ப்ளக்ஸ்) இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின், அவர் பிறரை விட தன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார். மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான்.

இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானது, ஒரு மனிதனை Superiority complex என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இந்த மனப் பாங்கானது, அறிவுப்பூர்வ நிலையிலிருந்து ஒரு மனிதனை திருப்பி, அவனை தவறான கருத்தியலுக்குள் செலுத்தி, அவனது ஆளுமையில்(Personality) பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவர் தன்னுடைய சுய நன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், வேறு யார் அவரின் நலனில் அக்கறை செலுத்துவர் என்ற கேள்வி எழுவது இயற்கையே. மனித மனமானது, இயல்பிலேயே தன்னுடைய சுய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது. ஆனால் சமூகத்தில் முக்கியத்துவம் பெற நினைக்கும் ஒருவர் தன்னோடு சேர்த்து மற்றவர்களையும் பார்க்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு Superiority complex இருந்தால், அவர் தன்னைச் சுற்றியுள்ள பிற மனிதர்களை சமமாக மதிக்கவில்லை மற்றும் எந்தவித நல்ல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அர்த்தம். இந்தவிதமான மனோநிலை ஒரு தனிமனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்றில்லை, ஒரு சமூகத்திற்கு, ஒரு அரசியல் கட்சிக்கு, ஏன், ஒரு நாட்டிற்கே உரித்தானது. (உம்: வலுவான ஒரு பெரிய நாடு சிறிய நாடுகளை மதிப்பதில்லை மற்றும் அதை சுரண்டுகிறது) Superiority complex மூலம் ஒரு மனிதனுக்கு ஏற்படும் தீமையை விட, Inferiority complex மூலம் அதிக தீமை விளைகிறது. தாழ்வு மனப்பான்மை உள்ள ஒரு மனிதனால் எதையுமே சாதிக்க முடியாது. ஒரு மனிதன் பெரியவனா? அல்லது சிறியவனா? என்பது, அவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை வைத்தே அமைகிறது.

உங்களுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்தி, உங்களை மற்றவர் ஆதிக்கம் செய்ய நீங்கள் அனுமதித்து விட்டால், மனவியல்பு சிக்கல்களால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட ஒரு எளிய வழி என்னவெனில், இந்த உலகில் கடவுள் அல்லது இயற்கையைவிட உயர்ந்தது எதுவுமில்லை என்ற எண்ணத்திற்கு நீங்கள் வருவதுதான். அப்படி நினைக்கையில், உங்களுக்கு மனஅமைதி உண்டாகிறது. நினைத்ததை செய்யும் துணிவு கிடைக்கிறது. பிற மனிதர்களின் திறமைகளைப் பார்த்து நீங்கள் மிரள மாட்டீர்கள். ஏனெனில், உங்களிடம் இருக்கும் திறமையை நீங்கள் பயன்படுத்துவீர்கள்.


மனவியல்பு சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான சில வழிமுறைகளை இங்கு அலசுவோம்.....



எதிர்மறை எண்ணத்தை ஒழித்தல்:
உங்களின் மனதை ஒரு துயர சம்பவம் வாட்டினால் அதை நீக்க, ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை நினைவில் கொண்டு வரவும். ஒரு தோல்வி சம்பவம் நினைவில் வந்தால், வெற்றி சம்பவத்தை அங்கே கொண்டுவந்து இருத்தவும். சிறந்த எதிர்காலம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு மனிதனின் வாழ்வாதாரமாக இருக்கிறது. எனவே அந்த நம்பிக்கையை மனதில் இருத்தி, மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணத்தை ஒழிக்கலாம்.



தடைகளை அறிந்து களைதல்:
நீங்கள் நோய்வாய்ப்பட்டு, அதற்காக ஒரு மருத்துவரை நாடிச் செல்கையில், உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று மருத்துவர் முதலில் ஆய்வு செய்வார். நோயை உறுதி செய்த பின்புதான் உங்களுக்கான மருந்துகளை அவர் தருவார். பின்னர்தான் நோய் குணமாகும். அதேபோல்தான், உங்களின் கவலைக்கு காரணமான, முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் எவை என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அவற்றை களைந்தால்தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.


தனித்தன்மை:
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. தனது விருப்பத்தை அடைய ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் முயற்சியை மேற்கொள்வார். எனவே, ஒருவர் பின்பற்றும் அதே வழியை இன்னொருவர் குருட்டுத்தனமாக பின்பற்ற வேண்டியதில்லை.


நல்ல ஆலோசகரைப் பெறுதல்:
ஒருவர் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது எளிதான விஷயமல்ல. நமது பலம் மற்றும் பலவீனம் குறித்து நமக்கே பலவித சந்தேகங்கள் இருக்கும். நமக்குள் இருக்கும் அவநம்பிக்கைக்கு காரணமாக, சிறுவயதில் நடந்த சில கெட்ட சம்பவங்களும் இருக்கலாம். எனவே அவற்றிலிருந்து மீண்டு, நம்மை நாமே அறிந்துகொள்ள ஒரு சிறந்த மனநல ஆலோசகரை நாடலாம்.



என்னால் முடியும்:
இது ஒரு மந்திர வார்த்தைப் போன்றது. இந்த வார்த்தையை தியானம் செய்வதுபோல், ஒரு நாளைக்கு 10 முறையாவது திரும்ப திரும்ப சொல்லலாம்.


திறன்களை மதிப்பிடுதல்:
ஒரு மனிதனின் திறன் அவனது உடல், அறிவு மற்றும் மனம் ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கியது. இந்த அம்சங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டை ஒருவர் சரியாக செய்து விட்டால் அவருக்கு வெற்றிதான். அதேசமயம் குறைவாக செய்துவிட்டால், தாழ்வு மனப்பான்மையில் வீழ்ந்து விடுவோம்.


கடவுள் உங்கள் பக்கம்:
உங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை, அனைவருமே எதிர்பக்கம் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அனைவரினும் மேலான கடவுள் உங்கள் பக்கம் எப்போதும் இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும். இந்த எண்ணத்தின் மூலம் உங்களின் தாழ்வு மனப்பான்மை மறைந்து தைரியம் பிறக்கும்.


குறிப்பு:


வெறும் ஆலோசனைகளை படித்துவிட்டால் மட்டுமே மனவியல்பு சிக்கல்களிலிருந்து விடுபட்டுவிட முடியாது. வாழ்க்கையின் ஒரு நீண்ட முயற்சியாக அது இருக்கிறது. சிறு வயதில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நாம் வாழும் சூழல் போன்றவை நம் மனநிலையை கட்டியமைத்தாலும், பிறப்பிலேயே கிடைக்கும் சில அடிப்படை குணவியல்வுகள் பற்றியும் நாம் இங்கே யோசிக்க வேண்டியுள்ளது.

உலகத்திலேயே பெரிய உலகம் மனிதனின் மனம்தான். ஒரு மனிதன் முதலில் தனது மனதுக்குள்ளும், பிறகு இந்த உலகத்திற்குள்ளும் வாழ்கிறான். ஒரு மனிதன் தனது மன உலகை எவ்வாறு வைத்துக்கொள்கிறான் என்பதைப் பொறுத்தே அவனது புற உலக வாழ்க்கை அமைகிறது. மனதுக்குள் நடக்கும் போராட்டம்தான், புற உலகில் வேறொரு போராட்டமாக உருவெடுக்கிறது. ஒரு மனிதன் மனோரீதியாக வெற்றியடைந்தாலே, புற உலக வாழ்க்கையில் எளிதாக வெற்றியடைந்து விடுவான். இதுவே காலம்காலமாக நடைமுறை உண்மை.

ஒரு மனிதன் மகா யோகியாக மாறுவதும், பெரும் ஞானியாக வாழ்வதும், பணத்தாசை பிடித்து அலைவதும், தலைவனாக வேண்டும் என்று ஏங்குவதும், அஞ்சி அஞ்சியே வாழ்வதும், கிடைத்தது போதுமென்று நினைப்பதும், எதிலுமே திருப்தியடையாமல் இருப்பதும், எப்போதுமே சோகத்துடனோ அல்லது மகிழ்ச்சியுடனோ இருப்பதும், வாழ்வை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும், மரணம் வரை சென்று மீள்வதும், அடுத்தவரை அண்டியே வாழ்வதும், எப்போதுமே தன்னிச்சையாக செயல்படுவதும், எதிலும் மிகையாக செயல்படுவதும், எதிலும் சோம்பேறியாக செயல்படுவதும், எப்போதும் நடுநிலையாக செயல்படுவதும் ஒருவரின் உள்மனதிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

மனவியல்பு சிக்கல்கள்(Complexes) உள்மன செயல்பாடுகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த Complexes மூலமே ஒரு மனிதனின் அடிப்படை மனக் கட்டுமானம் அமைகிறது. எனவே, இப்பிரச்சினையை சரிசெய்வது மிக முக்கியம். இரண்டு வகை மனவியல்பு சிக்கல்களிலிருந்தும்(Superioriy and Inferiority complexes) விடுபட்டு, மனதை சரியான சுயமதிப்பீட்டு நிலையில் வைத்திருப்பதே நிம்மதியான மற்றும் வெற்றிகரமான வாழ்விற்கு வழி.


உளவியல் ஆலோசனைகள், தியானம், சிறந்த புத்தகங்களைப் படித்தல், நல்ல நண்பர்கள், ஒழுக்கமான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் போன்றவற்றின் மூலம் மனவியல்வு சிக்கல்களை ஒருவரால் வெல்ல முடியும்.

Saturday, October 15, 2011

முகங்கள் : தொழில் புரட்சித் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்!


இருபத்து நூற்றாண்டின் மிகப்பெரும் டெக்னோ ஆளுமைகளில் முக்கியமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.அவருடைய மரணம் எதிர்பார்த்த ஒன்றுதான். கணையத்தில் புற்றுநோய் அளவுக்கு மீறிப் போய் விட்டதாக ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே தெரிந்து விட்டதால், தன் அத்தனை வேலைகளில் இருந்தும் விலகி, அமைதியாகத் தன் மரணத்துக்காகக் காத்திருந்தார். அந்த தொழில்நுட்ப மன்னர். இத்தனைக்கும் ஸ்டீவ் ஹார்ட்வேர் இன்ஜினீயரோ, புரோக்கராம் எழுதும் சாஃப்வேர் நிபுணரோ அல்ல. அவர் டெக்னாலஜியை ஒருங்கிணைத்த சரியான தலைவர். எல்லா வேலைகளையும் முதலாளியே பார்க்க வேண்டியதில்லை. சரியான ஆட்கள் சரியான முறையில் அவற்றை செய்தாலே போதும் என்கிறத தத்துவத்தில் வெற்றி கண்டவர் ஸ்டீவ்.

சிரியா நாட்டிலிருந்து கலிபஃபோர்னியாவுக்கு வந்த ஒரு முகம்மதியே பேராசிரியருக்கும் அமெரிக்கப் பெண்மணிகளுக்க பிறந்த ஸ்டீவ் தங்களால் வளர்க்க முடியாததால் யாராவது தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்கள் அவர்கள் பால் மற்றும் கிளாரா ஜாப்ஸ் தம்பதி அந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டார்கள் இளம் வயதிலேயே ஸ்டீவின் பார்வை கம்ப்யூட்டரின் பக்கம் விழுந்து விட்டது இசை, சினிமா, தகவல் தொடர்பு இவை கம்ப்யூட்டர் மூலம் பல்வேறு எல்லைகளைக் கடக்கும் என்று அவருக்குத் தோன்றியது. அதை மெல்ல மெல்ல செயல்படுத்தினார். கடைசியில் 83 பில்லியன் டாலர்களை அவர் சம்பாதித்தாக ஓர் குறிப்பு சொல்கிறது. 1976-ம் வருடம் ஒரு கார் ஷெட்டில் தன் நண்பர் ஸ்டீஃபன் வொஸ்நய்க்குடன் சேர்ந்து ""ஆப்பிள்'' கம்பöனியைத் தொடங்கினார். ஆப்பிள்தான் மனித ஆசைக்குக் காரணம் என்பதால் அந்தப் பெயரை வைத்திருக்கலாம். எல்லோரும் எண்களையும் டெக்னாலஜி சம்பந்தப் பட்ட குறியீடுகளையும் தங்கள் நிறுவனப் பெயராக வைத்த போது ஸ்டீவ் வைத்த "" ஆப்பிள்'' அவருடைய கவித்துமான மனதையே காட்டியது. நான்கே வருடங்களில் 600 மில்லியன் டாலர்களை விற்பனையில் எட்டிப் பிடித்த ஆப்பிள் நிறுவனம் புகழ்பெற்ற ஃபார்ச்சூன் பத்திரிகையின் டாப் 500 உலக நிறுவன லிஸ்டில் இடம் பெற்றது தொழில் வரலாற்றில் இத்தனை வேகமான வளர்ச்சியை எந்த நிறுவனமும் பெற்றதில்லை.

ஆப்பிள் ஆரம்பித்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாக்கிண்டோஷ் எளிய வகை கம்ப்யூட்டர்களை அவர் அறிமுகப்படுத்தினார். பழையன கழிதலும், புதியன புகுதலும் அத்தனை சுலபாக நடந்து விடுவதில்லை மாக் (செல்லமாக) கம்ப்யூட்டர்கள் மார்க்கெட்டில் சக்கைபோடு போட்டன . ஆனால் தான் ஆரம்பித்த ஆப்பிள் கம்பெனியின் இருந்தே ஸ்டீவ் வெளியேற வேண்டிய நிலையம் ஏற்பட்டது. அப்போது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பக்கம் திரும்பினார் ஸ்டீவ் ஹாலிவுட் ஸ்பெஷல் எஃபெக்ட் மன்ன் ஜார்ஜ் லுகாஸிடமிருந்து ஒரு சின்ன கிராஃபிக்ஸ் கம்பெனியை விலைக்குவாங்கினார். தொழில்நுட்ப ஜீனியணுஞூ இளைஞர்களைத் தேடித் தேடி அதில் சேர்த்தார். "தி டாய் ஸ்டோரி சூப்பர் ஹிட் கிராஃபிக்ஸ் படம் அதிலிருந்து வெளி வந்தது பிக்ஸர் அனிமேஷன் ஸ்டூடியோஸ் என்று தன் கம்பெனிக்குப் பெயிரிட்டார். வரிசையாகப் பல அனிமேஷன் படங்கள் அங்கே பட்டைத் தீட்டப்பட்டு உலகெங்கும் சூப்பர் ஹிட் ஆகின. பல அகாடமி விருதுகளைப் பெற்றது ஸ்டீவின் சேவை தங்களுக்கு அவசியம் என்பதை ஆப்பிள் உணர்ந்து அவரை மிகுந்த மரியாதையுடன் மீண்டும் இணையுமாறு அழைத்தது.

கிட்டத்தட்ட 12 வருட வனவசாத்திற்குப் பிறகு 1997-ம் வருடம் மீண்டும் ஆப்பிளுக்குத்திரும்பினார் ஸ்டீவ். அப்போது தான் செல்ஃபோன் என்னும் கையடக்க புயல் உலகை மையம் கொண்டிருந்தது. ஸ்டீவுக்கு அதன் எதிர்கால சாத்தியங்கள் ஆச்சர்யமாக இருந்தன. அதன் சிறிய திரையும், சிப்புகளும் இணைப்புகளும் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடும் என்பது அவருடைய தீர்க்க தரிசனம் வரிசையாக ஐ பாட் ஜ ஃபோன், ஐ பேட் என்று பிற்பாடு அவர் தான் தூள் கிளப்ப ஆரம்பித்தார். பெப்ஸி கோலாவின் தலைமை நிர்வாக அதிகாரியைப் பார்த்து ஸ்டீவ் ஒரு முறை கேட்டார்.. ""வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை இதைப் போன்ற சர்க்கரைத் தண்ணீரை விற்றே தள்ள போகிறீர்களா? அல்லது உலகையே மாற்றக் கூடிய ஏதாவது ஒரு விஷயத்தில் இறங்கப்போகிறீர்களா? தன் தயாரிப்புகளில் அத்தனை சீக்கிரம் திருப்தியுற மாட்டார் ஸ்டீவ். ஐ பாட் கருவிகள் இரண்டு மாடல்கள் கடைசியாக ஒகே செய்யப்பட்ட நிலையில் கப்பல் ஏற்றும் கடைசி நிமிடத்தில் அந்த ஆர்டரை ரத்து செய்து புது மாடல்களை செய்யும்படி உத்தரவிட்டவர் அவர். வெறும் புதிய டெக்னாலஜி கண்டுபிடிப்புகளால் மட்டும் பயன் இல்லை. சுந்திரமான கலைகளுடன் அந்த தொழில்நுட்பம் திருமணம் செய்ய வேண்டும். மனித நேயத்துடன் திருமணம் செய்து நம் இதயத்தை அந்த தொழில் நுட்பம் பாடச் செய்ய வேண்டும் என்று ஒரு முறை யுனிவர்ஸிட்டி பேச்சில் குறிப்பிட்டார் ஸ்டீவ்.

56வயதில் அவருடைய இதயம் தன் பாடலை நிறுத்திக்கொண்டது. இன்று உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கலாம். அதில் நங்கள் பாட்டு கேட்கலாம். யூ டியூபில் வீடியோ பார்க்கலாம் மெயில் அனுப்பி சாட் செய்யலாம். மொபைல் போனில் இருந்து ஏழாம் அறிவு படக் காட்சி டிக்கெட்டைப் பதிவு செய்யலாம். மின்சாரக் கட்டணத்தை அதன் மூலம் செலுத்தலாம். இவற்றுக்கெல்லாம் பின்னயில் எப்போதும் நீல நிற ஜீன்ஸும் முழுக்கை ஸ்வெட்டரும் அணிந்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருப்பார்.


மரணம் பற்றி அவர் குறிப்பிட்டவற்றில் சில:

இதுதான் உன்னுடைய கடைசி தினம் என்பது போல் தினமும் நீ வாழ்ந்தால், வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரலாம். சிறு வயதில் நான் படித்த இந்த வாக்கியம் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது: நீங்கள் இறப்பது முன்னாலேயே தெரிந்து விடும்போது இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை என்பது புரிந்து விடுகிறது. நிர்வாணமாக இருப்பதைப் போல் உணர்கிறோம்...

உங்கள் வாழ்க்கை மிகச்சிறியது. உங்களுக்காவே அதை வாழுங்கள். துருப்பிடித்த சித்தாந்தங்களுக்காக வாழ்க்கையை வீணாக்காதீர்க். அடுத்தவர்களின் கருத்துச் சத்தங்கள் உங்கள் உள்ளுணர்வின் சத்தை நீர்த்துப் போகச் செய்ய அனுமதிக்காதீர்கள். முட்டாள்தினத்திலிருந்துதான் புத்திசாலித்தனம் பிறக்கிறது. அதனால் எப்போதும் பசியோடு இருங்கள். எப்போதும் முட்டாளாக இருங்கள். உங்கள் இதயமும் உள்ளுணர்வும்உங்களை வழி நடத்தட்டும்.



- கிருஷ்ணா டாவின்ஸி