Wednesday, June 22, 2011

கான்பிடன்ஸ் கார்னர் !!!

தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”. “என்னால் முடியவில்லையே”! “அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!” “சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு

சிரித்து விடுங்கள். “குருவே! அதுவும் முடியவில்லை!” குரு சொன்னார், “அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்.”


###########################

“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?” என்று பறவை தேனீயிடம் கேட்டது. “எனக்கு வருத்தமில்லை. மனிதர்கள் தேனைத்தான் திருடிச்செல்ல முடியும். தேனை உருவாக்கும் என் சக்தியை யாராலும் திருடிச்செல்ல முடியாது” என்றது தேனீ.

தன்னுடைய தனித்தன்மையை நம்புபவர்கள் மற்றவர்கள் சதியில் மலைப்பதில்லை.


###########################

தனக்குப் பெரும் துரோகம் செய்து, பிறகு மனம் வருந்திய அலுவலர் ஒருவரை, நிறுவனத்தின் தலைவர், யாரும் எதிர்பாராத விதமாக மன்னித்தார். “அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால்தான் மன்னித்தீர்களா?” என்று கேட்டபோது

அவர் சொன்னார், “நான் ஆயிரம் தவறுகள் செய்த பிறகும் என்னை நான் நேசிக்கிறேன். ஒரு தவறுக்காக ஒருவரை தண்டிப்பது என்ன நியாயம்?”


#########################

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலிருந்து கற்கவேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்று வகுப்பில் ஆசிரியர் கேட்டார். கவனக் குறிப்பு, களத்தில் முடிவெடுத்தல் என்று பலரும் பல விதமான பதில்களைச் சொன்னார்கள். ஒரு மாணவன் சொன்னான், ”நூறு மீட்டர்கள் ஓடுவதற்காக, நாளொன்றுக்கு பல கிலோ மீட்டர்கள்

ஓடிப்பயணம் செய்கிறார்கள். இந்தப் பயிற்சிதான் அவர்களை வெற்றி யாளர்களாக்குகிறது. குறைந்த பட்ச தூரத்திற்காக அதிகபட்ச தூரத்தை ஓடிக் கடக்கும் பொறுமையும் ஈடுபாடுமே முக்கியமான பாடங்கள்.”


No comments:

Post a Comment