டெக் க்ரஞ்ச் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, facebook தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 75 கோடியைத் தொட்டுள்ளது. மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த தளம் வந்து செல்வோர் எண்ணிக்கை இது. இது சில நாடுகளில் உள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாகும். சில மாதங்களுக்கு முன், பேஸ்புக் தளத்தில் வெளியான அறிவிப்பில், அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியாக இருந்தது. திடீரென 25 கோடி அதிகரித்தது வியக்கத்தக்க ஒரு விஷயமாகும். 2004 ஆம் ஆண்டு பேஸ்புக் தொடங்கப் பட்டது. 2010 ஆம் ஆண்டில் இதில் பதிவு செய்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 கோடியை எட்டியது. அதாவது சராசரியாக ஆண்டுக்கு 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment