Bluetooth- பெயர்க் காரணம் !

கி. பி . 900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் (Harald Bluetooth) என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தைத் தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், வண்ணத்திற்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. **********************************************************************************
இந்தியாவில் அயல்நாட்டு வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !
2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கணக்கீட்டின்படி இந்தியாவில் உள்ள அயல்நாட்டு வங்கிகளின் கிளைகள் அதிகரித்துள்ளது. இந்த வங்கிகளின் எண்ணிக்கை 4.4 சதவீதம் அதிகரித்து 306 வங்கிகளாக உள்ளது. 2009-10 நிதியாண்டின் முடிவில் இந்தியாவில் அதிகரித்த வங்கி கிளைகளின் எண்ணிக்கை 306ல் 235 வங்கிகள் அயல்நாட்டு வங்கி கிளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
************************************************************************************
iphone, ipad-களுக்கான OS : ஆப்பிள் அறிமுகம்!
iphone, ipod touch, மற்றும் ipad -களில் பயன்படும் வகையிலான IOS என்றழைக்கப்படும், ஐஆப்ரேடிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பான 4.3ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, PC World- நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த புதிய ஆபரேடிங் சிஸ்டத்தின் மூலம், iphoneகள், ipod touch மற்றும் ipad-கள் பயன்பாடு எளிதாகும் என்றும், மேலும் இந்த operating system பயன்பாடு, phone-னை WiFi router - ராக, ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களை இணைக்கவும் பயன்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*********************************************************************************
MAT Exam:
*********************************************************************************
MAT Exam:
நாட்டில் உள்ள சுமார் 570 B-school களில் படிப்பில் சேர Management Aptitude Test( MAT) நடத்தபடுகிறது. இந்த எக்ஸாம் வரும் ஏப்ரல் 6
தேதிக்குள் பெயர்களை பதியு செய்து கொள்ளவேண்டும் . இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 9 ம தேதிக்குள் அனுப்பவேண்டும். இது வழக்கமான exam மட்டும்மின்றி computer மூலம் online exam - யும் நடைபெறுகிறது . Exam Date: 01 - 05- 2011. Online Exam date : 07-05-2011. மேலும் தகவலுக்கு www.aima-ind.org/.
********************************************************************************
SMS கடி
Teacher: நீ பெரியவனாகி என்ன பண்ண போற ?
Teacher: அது இல்ல நீ என்னவா ஆகா விரும்புற ?
Boy: Husband…
Teacher: No I Mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கனும்னு எதிர் பார்க்கிறாய் ?
Boy: Wife…
Teacher: Oh No உங்க Parents’ku என்ன
பண்ண போற ?
Boy: மருமகளை தேடுவேன் …
Teacher: Stupid, உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறார் ?
Boy: குழந்தை …
Teacher: அய்யோ !! டேய் , உன் வாழ்க்கை லட்சியம் என்ன ?
Boy: நாம் இருவர் !!! நமக்கு இருவர் !!!
**********************************************************************************
கவிதை !

மருந்திட்டுகொள்ள
மனமில்லை
உன் நகம் கிழித்த காயம்!
****
உனக்கு
மழை பிடிக்கும் என்பதால்
எனக்கு குடை பிடிக்காது !
*****
சூரியனை
நான்தான்
மறைத்து வைத்திருக்கிறேன்
நீ தூங்குவதற்காக !
************************************************************************************
இந்த வார தத்துவம்!
நியாமில்லாத விமர்சனமும் ஒரு பாராட்டே ஆகும். நீ ஒருவனின் பொறாமையை தூண்டிவிட்டாய் என்பதே இதை காட்டுகிறது.
***********************
சராசரி மனிதனின் விமர்சனம் உன் நோக்கத்தை திசை திருப்ப அனுமதிக்காதே . நீ கனவு கண்டால், அவன் உன்னை பைத்தியக்காரன் என்பான். நீ வெற்றி பெற்றால், நீ அதிஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலே, உன்னை பேராசைக்காரன் என்பான் . அவனை கண்டுகொள்ளாதே . அவனால் உன்னை எப்போதுமே புரிந்து கொள்ள முடியாது!
***********************************************************************************
சரவணா! கலக்குறிங்க...
ReplyDeleteya great...kavithai yellam super
ReplyDeleteninaivirukum
ReplyDeletepothum
rasikka
inimayana
varigalai
vasikiren
alagiya kavithikku
valththukkal
BY
T.DEEPA(IT-III)
ninaivai maraka
ReplyDeletenee kanavaanai...
aanaal
nenjil
puthainthu
uyiraanai..... by DEEPA.T(IT-III)