குருவிடம் வந்தான் ஒருவன். " குருவே, எனக்கு இருப்பது ஒரு மகன். அவனை எல்லா கலைகளிலும் கெட்டிக்காரனாக இருக்க விரும்புகிறேன் ஆனால்... "
" என்ன ஆனால் ?... என்னாச்சு ?"
" அவன் பள்ளிப் படிப்பைத் தவிர நீச்சல் கற்று கொள்கிறான். பாட்டு கிளாஸ் போகிறான். கராத்தே சேர்த்துவிட்டேன். விடுமுறை நாட்களில் நடனம் படிக்கிறான் . அவனுக்கு எல்லாம் தெரிகிறதே தவிர எதிலும் அவனால் முதலில் வர முடியவில்லை. அதற்கு என்ன செய்வது குருவே ?"
அவானுக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார் குரு.
ஒரு பிரசங்கி இருந்தார். ஊர் ஊராய் சென்று நல்ல கருத்துகளை பிரசங்கிப்பதுதான் அவர் வேலை . ஒரு முறை ஒரு மலை கிராமத்துக்கு சென்றார். அங்கு ஆடு , மாடு மேயிப்பவர்கள்தான் அதிகம். அவர்களை மாலை நேரத்தில் ஒரு இடத்தில் கூட சொன்னார், அங்கு அவர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடு.அவர்களிடம் பேசுவதிற்கு நெறைய விஷயங்களை யோசித்து வைத்திருந்தார்.
" என்ன ஆனால் ?... என்னாச்சு ?"
" அவன் பள்ளிப் படிப்பைத் தவிர நீச்சல் கற்று கொள்கிறான். பாட்டு கிளாஸ் போகிறான். கராத்தே சேர்த்துவிட்டேன். விடுமுறை நாட்களில் நடனம் படிக்கிறான் . அவனுக்கு எல்லாம் தெரிகிறதே தவிர எதிலும் அவனால் முதலில் வர முடியவில்லை. அதற்கு என்ன செய்வது குருவே ?"
அவானுக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார் குரு.
ஒரு பிரசங்கி இருந்தார். ஊர் ஊராய் சென்று நல்ல கருத்துகளை பிரசங்கிப்பதுதான் அவர் வேலை . ஒரு முறை ஒரு மலை கிராமத்துக்கு சென்றார். அங்கு ஆடு , மாடு மேயிப்பவர்கள்தான் அதிகம். அவர்களை மாலை நேரத்தில் ஒரு இடத்தில் கூட சொன்னார், அங்கு அவர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடு.அவர்களிடம் பேசுவதிற்கு நெறைய விஷயங்களை யோசித்து வைத்திருந்தார்.
ஒரே பிரசங்கத்தில் அனைவரையும் அறிவாளியாக மாற்றிவிட வேண்டும் என்பது அவர் திட்டம் ஆனால் அந்த மாலை பொழுது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது . அந்த குறிபிட்ட இடத்துக்கு சென்றபோது ஒரே ஒரு மனிதன்தான் வந்திருந்தன். பிரசங்கிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
அந்த மனிதனிடம், " உன் ஒருவனுக்காக நான் பிரசங்கம் செய்ய முடியாது. அதனால் நீ போகலாம் " என்றார்.
அதற்கு அவன் ," ஐயா , நான் மாடுகளுக்கு தீனி போடலாம்னு வருவேன். அப்போது சில நாள் எல்லா மாடும் அங்க இருக்காது. ஒன்னு இரண்டு தான் இருக்கும். அதுக்காக எல்லாரும் இல்லை என்று தீனி போடாம போகமாட்டேன்." என்றான்.
அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்பதை புரிந்துகொண்ட பிரசங்கி சந்தோசமாக போதனைகளை சொல்ல ஆரம்பித்தார். சுமார் இரண்டு மணி நேரம் அவனை போதனைகளால் நிரப்பிவிட்டார். எல்லாம் முடிந்தது.
நல்ல போதனைகளை தந்துவிட்டோம் என்ற பெருமையுடன் அவனை பார்த்து , " எப்படி இருந்தது ? " என்று அவனை பார்த்தார் .
அதற்கு அந்த ஆடு , மாடு மேய்ப்பவன் சொன்னான் , " அய்யா , ஒரு விஷயம் . ஒரு மாடு இருந்தாலும் தீனி போடுவேன் என்று சொன்னேன் . ஆனால் கொண்டு வந்த தீனியை எல்லாம் ஒரே மாட்டுக்கு போட்டு வாயில குத்தி திணிக்க மாட்டேன்!".
குரு இந்த கதையை சொன்னதும் வந்தவனுக்கு தனது தவறு புரிந்தது.
அப்போது குரு அவனிடம் சொன்ன Win மொழி : " திணித்தால் வராது திறமை !"
very true sir.. nanga enga staffs kita sola ninaikradha neenga solitinga
ReplyDelete