Wednesday, August 20, 2014

flipkart.com vs amazon.com

        Iron Box  இருந்து FRIDGE வரை எந்தப் பொருளாக இருந்தாலும் , அதை வாங்குமுன் கடை கடையா ஏறி இறங்கி , ஒன்றுக்கு பத்துமுறை விசாரித்து வாங்குவதுதான் நாம் வழக்கம். ஆனால் , இன்றைக்கு E- Commerce   வந்தபின் வீட்டில் இருந்தபடியே எல்லா  பொருட்களையும் வாங்குகிற நிலைமை உருவாகிவிட்டது . இனிவரும் காலத்திலும் பலரும் E- Commerce மூலமே பொருட்களை வாங்க வாய்ப்பு இருப்பதால் , இந்த துறையில் இருக்கும்  நிறுவனங்களிடம் பெரும் போட்டி  நிலயுகிறது. குறிப்பாக flipkart - amazon   நிறுவனங்களிடம் கடும் போட்டி நடக்கிறது.

     Flipkart one billion dollars ( Rs.6000 Cr) நிதியை திரட்டியுள்ளது என்ற செய்தி மக்களை சென்றடைவதற்குள், amazon 2 billion dollers ( Rs.12,000 cr)  முதலீட்டை இந்திய வர்த்தக விரிவாகதுக்காக ஒதுக்கிவிட்டது.

     E - Commerce நிறுவனங்களில் எக்கச்சக்கமாக நிதி திரண்டாலும், மிகப் பெரிய E - Commerce நிறுவனங்கள் அனைத்துமே தனது கடைசி காலாண்டு அறிக்கையில் நஷ்டத்தையே கண்டுள்ளன. இருந்தும் ஏன் இந்த நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

     
          flipkart , amazon  போன்ற நிறுவனங்கள் நிதி திரட்டும்போது மொத்த வாடிக்கையளைர்கள் இத்தனை லட்சம் பேர் உள்ளனர் , அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு இவ்வளவு தொகையை எங்களிடம் செலவிடுகிறார்கள்; இவர்களது செலவு விகிதம் வரும் 5 ஆண்டுகளில் இவ்வாறு மாறலாம் ;அப்படி மாறினால் எங்கள் நிறுவனம் இவ்வளவு லாபம் சம்பாதிக்கும் என்று சொல்லித்தான் நிதி திரட்டுகின்றன.
         
               E - Commerce நிறுவனங்களின் இந்த விளக்கத்தை முழுக்க நிராகரித்துவிடவும் முடியாது.1999 - 2000 ஆண்டுகளில் .COM என்ற இணையதள சேவையை ஆரம்பித்த பல நிறுவனங்கள் நஷ்டத்தில் காணாமல்போனது, ஆனால் , இன்று E - Commerce துறையும் அப்படி நொடிந்து போகும் என்று சொல்லிவிட  முடியாது . காரணம் , மக்களின் வேலை , அவர்களால் shopping -க்கு  என்று தனி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை அதனால் online வர்த்தகம் முக்கிய பங்காற்றுகிறது.

Retail நிறுவனங்களும் இதைத்தான் செய்கின்றன. அவைகளும் அடக்க விலையில் சுமார் 3-4 % லாப வரம்பில்தான் பொருட்களை விற்கின்றன . ஆனால் , amazon , flipkart போன்ற நிறுவனகள் retail நிறுவனங்களைவிட 20% குறைவான விலையில் தருகின்றன.

   இதைத்தான் நன்றாக கவனிக்க வேண்டும் . இவர்கள் திரட்டும் நிதியில் இருந்துதான் இது போன்ற offer களை அள்ளி வழங்குகின்றன . இவர்களது நோக்கம் தொலைநோக்கில் லாபத்தை அடைவதுதான்.

       தற்போது 1 Billion -னை திரட்டியுள்ள flipkart   இந்த பணத்தை அப்படித்த செலவு செய்யும் . 10,000 ரூபாய்க்கு விற்கும் ஒரு பொருளை இந்த நிறுவனம் 9,500 ரூபாய்க்கு தருகிறது எனில் , இது போன்று அவர்கள் திரட்டிய நிதிகளால் மட்டுமே முடியும். அவர்கள் இதற்கு , நாங்கள் கடைகள் என்ற அமைப்புக்கு செலவு செய்வதில்லை ; இதற்கு பயன்படும் பணியாளகளின் எண்ணிக்கை குறையு என பல காரணங்கள் கூறினாலும் இதற்கு ஆகும் செலவு குறையுதான் . ஆனால் , அதற்கும் அதிகமாக offer -ரில் பொருட்களை விற்பதற்கும் இதுபோன்று திரட்டப்பட்ட நிதிதான் உதவுகிறது.
       
     அமெரிக்க Amazon -னை இந்திய flipkart -டால் சமாளிக்க முடியுமா என்பது அடுத்த  கேள்வி . அமேசானும் flipkart போல ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் .அது சர்வதேச அளவில் தன்னை நிலைநிருதிக்குள்ள , குறைந்த விலையில் offer - களை வழங்கி வருகிறது .

         இரு நிறுவனங்களுமே இந்தியாவின் மீது இலக்கு வைத்துள்ளன . ஏன் என்றால் உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா . இங்குதான் அவர்களால் அதிக வாடிகையாளகளைத் தொடர முடியும் .

         amazon போன்ற பெரிய சர்வதேச நிறுவனம் பணத்தால் இந்தியாவில் தன்னை விரிவுபடுத்தி கொண்டதால் , flipkart டை வீழ்த்திவிடும் என்று இல்லை. இங்குள்ள போட்டியை சமாளிக்கும் உத்திகளை flipkart கையளும்பட்சத்தில் amazon னுக்கு flipkart சவாலாக இருக்கும். உதாரணமாக , ப்ளிப்கர்ட் இப்போது  எப்ப்கார்ட் எனும் courier வசதியை கொண்டுள்ளது . இதுவும்கூட வாடிக்கையாளரின் நம்பிக்கையை அதிகரிக்கும் விஷயம்தான் . இன்னும் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது பணம் தருவதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் . மற்ற வழிகளில் பணம் செலுத்தும் வசதிகள் இருந்தும் , அதிகமானோர் நம்பிக்கை இல்லாமையால் இந்த முறையைத்தான் தொடருகிறாகள். இது மாறினாலே E -Commerce துறையின் நம்பிக்கை அதிகரித்து , நிறுவனங்கள் லாபப் பாதைக்குள் பயணிக்க தொடங்கிவிடும்.
     
          இதில் கடைசி பலன் யாருக்கு எனில், வாடிக்கையாளருக்குதான் .இவர்களது போட்டியில் அதிகம் offer களை வழங்குவார்கள் . இருந்தாலும் அதே வாடிக்கையாளர்களை எந்த நிறுவனம் திருப்திபடுத்தி தொடருந்து இணைப்பில் இருக்க வைக்கிறதோ அவர்கள் கையில்தான் E - Commerce துறை இருக்கும் .

          Online வர்த்தகம் என்று வரும்போது உள்நாடு நிறுவனமா , வெளிநாடு நிறுவனமா என்று வாடிக்கையாளர்பார்க்கமாட்டார்கள்  குறைந்த விலை,அதிக சேவை தரும் நிறுவனம் எதுவோ , அதையே மக்கள் அதிகம் விரும்புவார்கள் .flipkart நிறுவனம் வாடிக்கையாளர்கள் விரும்புகிற வகையில் நடக்கும்பட்சத்தில் , amazon நிறுவனத்துக்கு நிச்சயம் பெரிய போட்டியைக் கொடுக்கும் !



-  நாணயம் விகடன் ......
             


No comments:

Post a Comment